உளவு வேலைகளுக்கு பயன்படுப்பட்ட நடிகைகள்: பாகிஸ்தானிய முன்னாள் ராணுவ அதிகாரி தகவல்

0
331

பாகிஸ்தானிய நடிகைகளை உளவு வேலைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர் என அந்நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் அடில் ராஜா. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரான அவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானில் இருந்து திடீரென காணாமல் போனார் என தகவல் வெளியானது.

உளவு வேலைகளுக்கு பயன்படுப்பட்ட நடிகைகள்: முன்னாள் ராணுவ அதிகாரியின் பகீர் தகவல் | Pakistan Actresses Used Espionage Ex Army Officer

அதன்பின் பிரித்தானியாவில் உள்ள அவரது குடும்பத்தினருடன் இணைந்து விட்டார் என கூறப்பட்டது.

மேலும்  இவர், ராணுவ வீரர் பேசுகிறார் என்ற பெயரிலான யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். 2.9 லட்சம் பேர் அதனை பின்தொடருகின்றனர்.

அதில் சமீபத்தில் அவர், நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகள் பாகிஸ்தானிய நடிகைகளை உளவு வேலைகளுக்கு பயன்படுத்தியுள்ளது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

உளவு வேலைகளுக்கு பயன்படுப்பட்ட நடிகைகள்: முன்னாள் ராணுவ அதிகாரியின் பகீர் தகவல் | Pakistan Actresses Used Espionage Ex Army Officer

அவர்கள் பெயர் எதனையும் குறிப்பிடாதபோதும் அவர்களது பெயரின் முதல் எழுத்துகளை பயன்படுத்தி உள்ளார்.

இந்த காணொளி வைரலானதும் பாகிஸ்தான் உளவு அமைப்பு தயாரித்து வெளியிட்ட நாடகங்களில் பணியாற்றியவர்களை குறிப்பிட்டு, அவர்களே அடில் கூறியுள்ள நடிகைகள் என மக்கள் கூற தொடங்கினர்.

அதில், நடிகை சாஜல் ஆலை என்பவரும் ஒருவர். அதற்கு சாஜல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் தரம் குறைந்து போவது என்பது வருத்தத்திற்கு உரியது மற்றும் அருவருக்கத்தக்கது.

ஒருவரின் தனி பண்பு நலனை படுகொலை செய்வது என்பது மனிததன்மையின் மிக மோசம் வாய்ந்த வடிவம் மற்றும் பாவத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் உயர் பதவியில் இருந்த இந்தியர்களை காதல் என்ற பெயரில் பயன்படுத்தி அவர்களிடம் இருந்து ராணுவ உளவு தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த சில பெண்கள் பெற்ற செய்திகள் வெளிவந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.