யாழ்ப்பாணத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சா!

0
293

யாழ்ப்பாணத்திலிருந்து கடத்தப்பட்டு வீடொன்றின் பின்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தொிவித்துள்ளனர்.

பாரிய போதைப்பொருள் கடத்தல்

தம்புள்ளை பிரதேசத்தில் சில காலமாக பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக பொலிஸ் விசேட பணியக குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தம்புள்ளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.