வலியில் துடிதுடித்த சிறுமி; உதவாது வீடியோ எடுத்த மக்கள்!

0
501

உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று 13 வயது சிறுமி தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சிறுமிக்கு யாரும் உதவி செய்யாது செல்போனில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி தனது இரத்தக்கறை படிந்த கைகளை நீட்டி, உதவிக்காக அழைப்பதும், சுற்றி நிற்கும் ஆண்கள் அவளை வெவ்வேறு கோணங்களில் படம்பிடிப்பதில் மும்முரமாக இருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது.

வலியால் துடித்த சிறுமி

தகவல் அறிந்து பொலிஸார் வரும் வரை அந்த சிறுமி வலியால் துடித்தபடி காத்திருந்தார். இதேபோல் அந்த சிறுமியை பொலிசார் தூக்கிக்கொண்டு ஓடி, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.

விசாரணையில் அந்த சிறுமி, உண்டியல் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தும், ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியுடன் ஒரு வாலிபரும் சென்றுள்ளார்.

வலியால் துடிதுடித்த சிறுமி; உதவி செய்யாது காணொளி எடுத்த மக்கள்! | The Little Girl Was Throbbing In Pain

அது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. எனவே, அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

அதோடு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, சிறுமிக்கு என்ன நடந்தது என்று உறுதி செய்யப்படும்.

மேலும் சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.