“எனது மகன் எனக்கு வேண்டாம்” போதைக்கு அடிமையான மகனை பொலிசாரிடம் ஒப்படைத்த யாழ்ப்பாண தாய்

0
832

எனது மகன் எனக்கு வேண்டாம் என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

மகன் போதைக்கு அடிமை

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

வேறு வழியில்லை; யாழில் பெற்ற மகனை தூக்கியெறிந்த தாயார்! | Mother Who Gave Birth To Her Son In Jaffna

அத்துடன் ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.

அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவிட்டதற்கு அமைய சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.