பதுளை – எல்ல பிரதேசத்தின் ‘ரொக்’ என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீவைத்தமை தொடர்பில் 16 மாணவர்களை எல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் (26) மாலை குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பகுதியிலுள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா
குறித்த மாணவர்கள் பதுளையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போதே வனத்துக்கு தீ வைத்துள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.