மகனின் தாக்குதலில் தந்தை பலி!

0
530

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

தாயார் வைத்தியசாலையில்

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சந்தேகநபர் தந்தையின் உடலுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகனின் தாக்குதலில் பலியான தந்தை! இலங்கையில் கொடூரம் | Father Killed By Son S Attack

ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கர வண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டடிருந்த மகன்

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை அண்மையில் தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

மகனின் தாக்குதலில் பலியான தந்தை! இலங்கையில் கொடூரம் | Father Killed By Son S Attack

இந்நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

28 வயதுடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.