இலங்கையில் கொள்ளையடித்து தமிழகம் தப்பியோடிய இரு தமிழர் கைது !

0
712

இலங்கையில் தேடப்பட்டுவந்த இருவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்த நிலையில் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் திகதி முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி வழியாக அகதிகளாக தமிழகம் வந்தடைந்த இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நகைக்கடை கொள்ளை

கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடற்கரைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர், அவர்களை மீட்டு, மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற நபர் பிரபல நகைக்கடையை உடைத்து கொள்ளையடித்துச் சென்றமை தெரியவந்தது. அதுமட்டுமல்லாது ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் அவர் பிணையில் வெளியில் இருப்பதும் தெரியவந்தது.

இலங்கையில் கொள்ளையடித்து தமிழகம் தப்பியோடிய இரு தமிழருக்கு நேர்ந்த கதி! | Tamil Nadu After Robbing Sri Lanka

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தேடப்படும் குற்றவாளிகள் இருவரும் அகதிகளாக வாழ்வதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.