காட்டுப் பகுதியில் புதிதாகப் பிறந்த சிசு மீட்பு!

0
280

பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்த, உகுரெஸ்சாகம பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை பராமரித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு பிளாஸ்டிக் பையில் இருந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அந்த இடத்தில் திரண்ட கிராம மக்கள் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து சிசு நிக்கவெரட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.