முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் கொலன்னாவ பிரதேசத்தில் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணி புரிபவர் என கூறப்படுகின்றது.
அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த நபர் ஒருவர் அவரிடம் 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய நிலையில், தான் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி எனவும் இவ்வாறு அழைப்பேற்படுவதனை நிறுத்துமாறும் அயோமா ராஜபக்ச குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் தான் யாரிடம் பேசுகிறேன் என தனக்கு தெரியும் என கூறிய நபர் தாமதிக்காமல் பத்து லட்சம் ரூபாய் தொகையை தருமாறும் இல்லை எனில் கூட்டத்தை கொண்டு வந்து வீட்டை சுற்றி வளைத்து துரத்தியடிப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
பல மிரட்டல் அழைப்புகள்
சந்தேக நபரிடம் இருந்து தொடர்ந்து பல மிரட்டல் அழைப்புகள் வந்ததையடுத்து, அயோமா ராஜபக்ஷ இது குறித்து முன்னாள் ஜனாதிபதி பணியாளருக்கு தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த நிலையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த நபரை நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த நபருக்கு அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து 8ம் புனாய்வு பிரிவினர் ஆராந்து வருவதாக கூறப்படுகின்றது.