கொழும்பு றோயல் கல்லூரிக்கு அருகே தீ விபத்து!

0
578

கொழும்பு றோயல் கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. றோயல் கல்லூரி மாணவர் திறன் அபிவிருத்தி நிலையப்பகுதியிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

காரணம்

விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளிவரவில்லை. தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயிளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.