சுதந்திரக் கட்சிக்கு பெயர் பலகை மட்டுமே உள்ளது! – சந்திரிக்கா

0
459

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளகளிடம் பேருகையில் அவர் இதனை தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியில்   பெயர் பலகை மட்டுமே உள்ளது! | Freedom Party Has Only A Nameplate

இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயகக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்ததாகவும், தற்போது அது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம்

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்றும் கட்சியில் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளதாகவும்க் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு கட்சி முக்கியமல்ல என்றும் கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது மேலும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியில்   பெயர் பலகை மட்டுமே உள்ளது! | Freedom Party Has Only A Nameplate