ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை கோட்டாக்கு வழங்கக்கூடாது – சஜித் கட்சி

0
337

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என சஜித் தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதுபோல, நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பு

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜபகருணவே ( Harshana Rajakaruna ) மேற்கண்டவாறு கூறினார்.

மக்கள் போராட்டங்களால் நாட்டைவிட்டு வெளியேறி பதிவி துறந்த கோட்டாபய 3 மாதங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கோட்டாவுக்கு கொடுக்க கூடாது; போர்க்கொடி தூக்கும் சஜித் கட்சி! | Sajid Party Raising The War Flag Gotabaya