ரஷ்யா மீது வழக்குத் தொடரும் உக்ரைனை செல்வந்தர்!

0
376

உக்ரைனைச் சேர்ந்த முதனிலை செல்வந்தர் ஒருவர் ரஷ்யாவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உக்ரைனின் செல்வந்தரான ரிய்னாட் அக்மேடோவ் இவ்வாறு ரஷ்யாவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சொத்து உரிமைக்கு ரஷ்யா கடுயைமான இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ரிய்னாட் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தானியங்கள் மற்றும் உருக்கு உற்பத்திகளை ரஷ்யா களவாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமானத்திற்கு எதிராக இவ்வாறு இழைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.

கனடாவின் இந்த கொடூரச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய நீதிமன்றினால் ரஷ்யாவிற்கு எதிராக தண்டனை விதிக்கப்பட முடியாது என ரஸ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.