இலங்கை பெண் உட்பட 10 பேர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

0
585

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொராண்டோவில் இலங்கைப் பெண் ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயதான குற்றவாளி கடந்த ஆண்டு 10 பேரைக் கொலை செய்ததாகவும் 16 பேரைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். பாதிக்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்கள் நிறைந்த நெரிசலான டொராண்டோ நீதிமன்றத்தில் நீதிபதி அன்னே மல்லாய் தனது தீர்ப்பை வழங்கினார்.

கொலையாளி பரபரப்பான நடைபாதையில் வானை மோத செய்து எட்டு பெண்களையும் இரண்டு ஆண்களையும் கொலை செய்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 65 வயதான அமரேஷ் டெஸ்ஃபாமரியம் என்ற பெண் பல ஆண்டுகளுக்குப் பிறகு 23 ஏப்ரல் 2018 அன்று தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்தார். டொராண்டோ வீதியில் சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதற்கு வானை வாடகைக்கு எடுத்தார்.

முடிந்தவரை பலரைக் கொல்லத் தான் முடிவு செய்ததாகவும் இதற்கு ஆன்லைன் குழுக்களின் தவறான இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்றதாகவும் குற்றவாளி விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 80 வயதான டோரதி செவெல் 45 வயதான ரேணுகா அமரசிங்க மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த 22 வயதான ஜி ஹுன் கிம் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை எப்படி உணர்ந்தார் என்று புலனாய்வாளர்களிடம் கேட்டதற்கு அதற்கு பதிலளித்த குற்றவாளி நான் எனது பணியை நிறைவேற்றியது போல் உணர்கிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், திங்களன்று நடந்த தண்டனையின் போது ​​நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவம் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதை விவரிக்கும் தாக்க அறிக்கைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.