அம்பலாந்தோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மாயம்

0
382

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலலையில்  மாயமாகியுள்ளனர்.

அதன்படி 55 வயதான தாய், 16 வயதான மகன் மற்றும் 22 வயதான மருமகன் ஆகியோரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியிலுள்ள விஹாரைகக்குச் சென்றிருந்த ஒரு குழுவினர் அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளனர்.

அதன்போதே இம்மூவரும் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.