அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த கனேடியர் கைது!

0
612

சரக்கு ரயிலில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த கனேடிய பிரஜை ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன அதிகாரிகள் குறித்த கனேடியரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வின்ட்ஸோர் மற்றும் டெட்ரோயிட் ஆகியனவற்றுக்கு இடையிலான சரக்கு ரயிலில் பயணித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பது மிகவும் ஆபத்தானது என எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் பிரதானி ரொபர்ட் டென்லி தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் ரயிலை நிறுத்தி குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

33 வயதான கனேடியப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.