நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்

0
662

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அனைத்து தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதன்படி, நாடாளுமன்றத்தின் தொலைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை பெற வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் எழுதுபொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் உணவு வீணாவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உணவகப் பிரிவின் தலைவர்களுக்கு செயலாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொருளாதார நிலைமை காரணமாக, நாடாளுமன்றத்தில் தினமும் தயாரிக்கப்படும் உணவுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.