மனைவி மீது சந்தேகத்தால் கணவன் செய்த கொடூர சம்பவம்!

0
653

கற்புக்கரசி என நிரூபிக்க மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றிய கணவரின் விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது.

இவருக்கு மனைவியின் நடத்தையில் அதிகம் சந்தேகம் இருந்துள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு எழுந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் அவரும், உள்ளங்களையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்தது.

இதனால் அவரது கை கருகிவிட்டது. ஆனாலும் ஆனந்த் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.