தான் குறிபிட்டிருந்த திகதியிலே உயிரிழந்த பருவகால செயற்பாட்டாளர்

0
525

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. புவி தினமான கடந்த 22ம் திகதி மாலை 6:30 மணியளவில் நகரில் உள்ள உச்ச நீதிமன்ற கட்டிடம் முன் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்தபொலிஸார் , உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலராடோவின் போல்டர் பகுதியைச் சேர்ந்த அவர் பெயர் வின் புரூஸ் (வயது 50). அவரது முகநூல் பக்கத்தில், வின் புரூஸ் தன்னை ஒரு பௌத்தர் என்றும் பருவகால ஆர்வலர் என்றும் குறிப்பிட்டார்.

அக்டோபர் 2020 இல், அவர் ஒரு ஃபயர் ஈமோஜி மற்றும் 4/22/2022 அவர் இறப்பு திகதியை அறிவித்திருந்தார். இது தொடர்பில் புத்த சங்கத்தின் பெண் போதகர் கிரித்தீ கூறியதாவது , எனக்கு புரூஸை தெரியும். இவன் என் நண்பன்.

இது தற்கொலை அல்ல. பருவகால நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக புரூஸ் மேற்கொண்ட இரக்கத்துடன் கூடிய அச்சமற்ற செயல் என்று தெரிவித்து உள்ளார். பருவகால நெருக்கடி பற்றிய தகவல்களை நாங்கள் ஒன்றாகச் சேகரித்தோம். ஆனால் வரும் ஆண்டில் புரூஸ் அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.