‘கோத்தா கோ’ கிராமத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு

0
372
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சாதாரண மக்கள் மற்றும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு சங்கத்தின் பொதுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவிக்கிறது.