போர் தொடுத்தது சீனா? தொலைக்காட்சி செய்தியால் பதறிய மக்கள்!

0
426

தாய்வான் மீது சீனா தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக தவறான செய்தியை வெளியிட்டு பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக தாய்வான் தொலைக்காட்சி நிலையம் ஒன்று மன்னிப்புக் கோரியுள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பு நிகழலாம் எனும் அச்சத்துக்கு மத்தியில் தாய்வானில் 23 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தாய்பேவை தளமாகக் கொண்ட சி.டீ.எஸ் தொலைக்காட்சி சேவை நேற்று திடீரென ஒன்றுக்கு மேற்பட்ட அவசரச் செய்திகளை வெளியிட்டது.

அதில் சீனாவின் ஏவுகணையால் புதிய தாய்பே நகர் தாக்கப்பட்டிருப்பதாகவும் கப்பல்கள் தாக்கப்படுவதாகவும் கூறியதுடன், தாய்பே துறைமுகத்தில் இருக்கும் கப்பல்கள் சேதமடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டதால் மக்கள் மத்தியில், அச்சநிலை தோன்றியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து தமது தவறான தகவலுக்காக, குறிப்பிட்ட தொலைக்காட்சி நிலையம் மன்னிப்பு கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.