முழு மனதுடன் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர்!

0
455

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போறிஸ் ஜோன்சன் (Boris Jhonson) நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Jhonson), முழு மனதுடன் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதி அமைச்சர் சான்சலர் ரிஷி சுனாக் ஆகியோர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று கொண்டாடியமை அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து கொரோனா விதிமுறையை மீறியதால் இருவருக்கும் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்டதற்குப் பின்னர் முதன்முறையாக போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Johnson), முழு மனதுடன் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.