ஒரு வார காலத்திற்கு இலங்கை முடக்கம்!

0
518

நாளை (20) முதல் ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக 300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.