கிளிநொச்சியில் அதிகாலை 10 கடைகள் உடைப்பு

0
444

கிளிநொச்சி சந்தையில் 10 கடைகள் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த உடைப்பு சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் குறித்த கடைகளை உடைக்கும் காட்சிகள் சி.சி.ரி.விகளில் பதிவாகியுள்ளது.

உடைக்கப்பட்ட கடைகள் பெரும்பாலும் புடவைக்கடைகள் என்பதுடன், பாத்திர கடைகள், அழகுசாதன கடைகள் மற்றும் தேநீர்க் கடையும் உள்ளடங்குகின்றது.

சம்பவத்தில் பொருட்கள் திருடப்படவில்லை என்பதுடன், தேநீர்க் கடை ஒன்றில் சிறு தொகை பணம் மற்றும் இரு குளிர்பானங்கள், சிற்றுண்டிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.