சொத்துக்களை குத்தகைக்கு விட இலங்கை முடிவு!

0
522

பெறுமதிமிக்க பொது சொத்துக்களை குத்தகை அல்லது விற்பனை மூலம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்பதை புதிதாக நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசனை குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையம் 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையம் 400 மில்லியன் டொலர்களுக்கும் நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளமை பட்டியலில் உள்ள பிரதானவையாகும்.