காலி முகத்திடலுக்கு விஜயம் தந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

0
525

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காலி முகத்திடலில் போராட்டம் களத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

புலனாய்வுப் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவொன்று நேற்று அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களை போராட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இக் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.