புடின் கோபத்துடன் கேட்ட கேள்வி! நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்த ரஷ்ய ராணுவ அமைச்சர்

0
344

உக்ரைனின் பெரிய நகரங்களை ஏன் கைப்பற்ற முடியவில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிடம் புடின் கேட்டு கோபப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மிக மோசமான அளவில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. பெரிய நகரங்கள் எதையும் முழு கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யாவால் கொண்டு வரமுடியவில்லை.

இந்த போரில் கிட்டத்தட்ட ரஷ்யா முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவே மேற்கு உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் தான் சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோ கடந்த ஒரு மாதமாகவே வெளியே தென்படவில்லை. பொது இடங்களுக்கு அவர் வரவில்லை. இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் கடுமையான மாரடைப்பு வந்ததாக தெரியவந்தது.