புதிய அமைச்சரவை நியமனம்; அண்ணன் தம்பி இடையே மோதல்!

0
364

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் காரசாரமாக இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்த நிலையில் அதற்கான யோசனையை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல சிரேஷ்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்போது ஜனாதிபதியின் யோசனை நிறைவேற்றப்பட்டால் எதிர்க்கட்சியில் அமரப்போவதாக பிரதமர், தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன் , புதிய நியமனங்களை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அமைச்சர்களையும் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த யோசனைக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் , தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாரில்லை என தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுகின்றது.

இதனையடுத்து அவ்வாறு நடந்தால் தனக்கும் தனது குழுவினருக்கும் எதிர்க்கட்சியில் அமருவதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தெரிவித்த நிலையில், புதிய அமைச்சரவையை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.