உகாண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதா ராஜபக்சாக்களின் சொத்துக்கள்- பரபப்பை ஏற்படுத்திய தகவல்!

0
534

ராஜபக்சக்களின் சொத்துக்கள் அனைத்தும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு மூன்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள் சிறிலங்கா முத்திரையிடப்பட்ட பொருட்களை இலங்கையிலிருந்து உகாண்டாவிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பெப்ரவரி 2021 இல், கொழும்பில் இருந்து உகாண்டாவிற்கு 102 அச்சிடப்பட்ட பொருட்களை அனுப்புவதற்கான ஒப்பந்தத்தையே விமான நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் உகாண்டா நிறுவனமொன்றிற்கும் இடையிலான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் வணிகச் செயல்முறை என்றும், வணிக நோக்கங்களுக்காக மட்டுமே சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் விமான நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இதேவேளை குளோபர் செகியூரிடி பிரின்டர்ஸ் ஊடாக அச்சிடப்பட்ட உகண்டா நாணயத் தாள்களே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் பணத்தை எடுத்துச் சென்ற மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பற்றிய தகவல்களை பல இலங்கை சமூகப் பயனர்கள் தம்மிடம் கோரியதை அடுத்து பிரித்தானிய நாணய அச்சுப்பொறியான De La Rue ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் திருப்பதிக்கு பயணித்த தனியார் ஜெட் விமானம் உகாண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டில் பேராட்டம் நடத்திய இளைஞர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.