முல்லைத்தீவு மாவட்டத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது!

0
281

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில்செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம்(22) இரவு சம்பவ இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது குறிப்பிட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நேற்று (23) முல்லைத்தீவு மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வருகை தந்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி பனிக்கன்குளம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் 06 பேரில் பாணந்துறை, மொரட்டுவ, கிளிநொச்சி, மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.