கொரோனா தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0
338

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இம்மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 16,450 ஆக அதிகரித்துள்ளது.