சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 879 பேர் குணமடைந்தனர்

0
491

சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து 879 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 445 ஆக காணப்படுகின்றது. 5 ஆயிரத்து 863 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 859 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் இதுவரை 305 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.