சசிகலாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

0
312

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் முடிவடைந்தது. பின்னர் சசிகலா அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அவருக்கு இன்சுலின் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தநிலையில், இவ்வாறு திடீரென்று உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது.