காதலை கண்டித்ததால் ஆத்திரம்: தாய் மற்றும் தாத்தாவை உணவில் விஷம் வைத்து கொலை செய்த இளைஞர்

0
44

தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு உணவில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியில் பதிவாகியுள்ளது.

தனது காதலை கண்டித்தமையால் ஆத்திரமடைந்த இளைஞர் குறித்த இருவரையும் விஷம் வைத்து கொலை செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப் பாவனைக்கு அடியான குறித்த இளைஞர் பொறியியல் துறையில் படித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது காதல் விவகாரம் குறித்து குறித்த இளைஞர் வீட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு தாயும், தாத்தாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் குறித்த இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்படி ஹோட்டலில் இருந்து உணவு (சிக்கன் ரைஸ்) வாங்கிவந்த இளைஞன் அதில் இருவருக்கு விஷம் கலந்துகொடுத்துள்ளார்.

இதனை அறியாது உணவை உண்ட இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் உணவில் விஷம் கலந்திருப்பது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.