யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் 19 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!

0
558

 

தென்மராட்சி வரணி பகுதியில் 19 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

நாவற்காட்டு பகுதியில் நேற்று (27) மாலை இந்த சம்பவம் நடந்தது.

தனது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு நேற்று இரவு 7.30 மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம், இன்று பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளது.