சசிகலாவிற்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது;சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது

0
582

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் விடுதலை இந்த மாதம் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலை ஆக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சசிகலாவின் உடல்நலக் குறைவு பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

பெங்களூரு சிறையில் இருந்து நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா நினைவு நாளான 3 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.