இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

0
419

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை 17 ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

இங்கிலாந்தில் இதுவரை 97,939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.