இன்றே கடைசிநாள் – ரூபாய் 2,500 வாங்கிட்டீங்களா?

0
463

தமிழக அரசு பொங்கல் பண்டிகை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா 2,500 ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப் பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, ரேஷன் கடை வாயிலாக, இம்மாதம், 4ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. அவற்றை வாங்குவதற்கான அவகாசம், 13ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

பொங்கல் கொண்டாட, மக்கள் சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட காரணங்களால், மூன்று லட்சம் கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு வாங்காமல் உள்ளனர். எனவே பொங்கல் பரிசை வாங்காத கார்டுதாரர்கள், 18ஆம் தேதி முதல், 25ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ள, உணவு வழங்கல் துறை அவகாசம் அளித்தது.

அந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது. இதுவரை, பரிசு தொகுப்பு வாங்காதவர்கள், இன்று மாலைக்குள் வாங்கிக் கொள்ளலாம். இனிமேல் அவகாசம் நீட்டிக்கப்படாது.