தனிமைப்படுத்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் – இராணுவ தளபதி

0
427

இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை-1 C , கல்முனை-1 E, கல்முனை- 2 கல்முனை- 2 A, கல்முனை 2 B, கல்முனை- 3A ஆகிய பகுதிகளும் கல்முனை தெற்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை- 1 MD, மற்றும் கல்முனை குடி- 1, கல்முனை குடி- 2 , கல்முனை-3 MD ஆகிய பகுதிகளும் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பலாந்தோட்டையில் உள்ள 140 போலானா தெற்கு கிராம சுகாதாரப் பிரிவுக்குள் உள்ள மெல் கொ னிய கிராமம் ஆகிய பகுதிகள் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட் பட்ட பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம உத்தி யோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.