இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது – சிறிலங்கா ஜனாதிபதி

0
476

முந்தையய அரசு இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தது போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவைச் சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும் என்று சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான உடன்படிக்கை முன்னைய ஆட்சியில் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் இருவருக்கும் முன்பாக அப்போதைய அமைச்சர் சாகல ரத்நாயக்க, இந்தியப் பிரதிநிதிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்ததும் இந்த உடன்படிக்கைகளைச் செய்யமாட்டேன் என தூக்கி வீச முடியாது. அவ்வாறு செய்தால் தவறான எண்ணக்கருவொன்று உருவாகும்.

ராஜபக்சக்கள் அனைத்தையும் சீனாவுக்குக் கொடுப்பார்கள் என கூறப்படும். இது முறையானதல்ல. நாம் எந்த நாட்டுடனும் தொடர்புபட்டுச் செயற்படவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவுடன் செய்து கொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்று முழுதாக முதலீடாகும். அரசு முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டத்துக்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன்” என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு பேசினார்.