பிரித்தானியாவில் ஊரடங்கை நீட்டித்த பிரதமர் போரிஸ்! எப்போது வரை தெரியுமா?முக்கிய அறிவிப்பு

0
390

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், வரும் ஜுலை 17-ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டிக்கும் படி பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜோன்சன் தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.

பொது ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது.

ஜேர்மனிக்கு அடுத்தப்படியாக பிரித்தானியா பல்வேறு தளர்வுகளை அமுல்படுத்தியது. இதனால் மக்கள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைசர் தடுப்பூசி, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. உருமாமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியது.

இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலவேறு நாடுகள் பிரித்தானியா உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தது.

இந்த நிலையில் ஜூலை 17-ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும் என முடிவுக்க எடுக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு எடுக்கபட இருக்கிறது.

இந்த ஊரடங்கால் பப்புகள், ரெஸ்டாரன்ட்கள், மால்கள் போன்றவைகளும் மூடப்பட உள்ளது. நேற்று வரை 5.9 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.