சசிகலா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

0
361

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டால் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, சசிகலா உள்பட மூன்று பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவுக்கு கடந்த 20ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறை போலீசார் அனுமதித்தனர்.

அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சசிகலா நேற்று முன்தினம் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகாவுக்கு நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முடிவில், சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. பின்னர் அவர விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் கூறினர்.

நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதால், அது நிமோனியா பாதிப்பாக கருதப்படுகிறது. தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது என்று விக்டோரியா மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டடுள்ளது.