மீண்டும் திறக்கப்பட்டுள்ள யாழ் பொதுச்சந்தைகள்..!

0
346

யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொதுச்சந்தைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 15 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருந்தன.

அந்த வகையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சந்தைகளில் காவல்துறையினர், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilnews.com