மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்: அஜித் ரோஹன!

0
413

மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கியவகையில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதார மத்திய நிலையங்கள் உட்பட மீன் விற்பனை நிலையங்கள் காய்கறி விற்பனை நிலையங்களிலும் சிவில் உடையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

tamilnews.com