பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று கரையை கடந்தது. storm ‘Mankut’ storm China speed 162 km
புயல் காரணமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில், இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்த மங்குட் புயல், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குவாங்டாங் மாகணத்தில் உள்ள ஜிங்மன் கடற்பகுதியில் சுமார் 162 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 25 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 48 ஆயிரம் படகுகள் உடனடியாக கரை திரும்பிவிட்டன. வெளியேற்றப்பட்ட மக்களுக்காக 3 ஆயிரத்து 777 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புயலினால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் 7 நகரங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஷென்ஜென் விமான நிலையம் மூடப்பட்டது. குவாங்சோவில் விமான சேவைகள் இன்று வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஹைனான் மாகாணத்தில் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சீனாவின் குவாங்ஸி பிராந்தியத்தில் புயலால் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
tags :- storm ‘Mankut’ storm China speed 162 km
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- அமெரிக்காவை நெருங்கும் ‘புளோரன்ஸ்’ பயங்கர புயல் வானியல் துறை எச்சரிக்கை
- உலகின் மிகச்சிறிய தாய் உடல்நலக்குறைவால் மரணம்!
- அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சுரங்க ரயில் நிலையம்
- நடிகை ஸ்ரீதேவியை கெளரவிக்கும் சுவிட்சர்லாந்து
- துபாய் – அமெரிக்கா விமானத்தில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு
- ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
எமது ஏனைய தளங்கள்