பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாளாக ஒன்றாக இருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நேற்று மோதிக்கொண்டனர். வெளியே போ என்று சொல்லும் அள்விற்கு சண்டை பிடித்தனர். இதனை பார்த்த சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. Bigg boss 2 Yashika Aishwarya fight gossip
ஐஸ்வர்யாவும், மும்தாஜும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிவந்ததால் பிக்பாஸ் வீட்டில் சைரன் ஒலித்தது. சைரன் ஒலித்தவுடன் 5 போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்பது பிக்பாஸ் விதி. சைரன் ஒலித்ததும் ஐஸ்வர்யா நீச்சல் குளத்தில் குதித்தார், அதன் பின்னர் யாஷிகாவும் சென்ராயனும் குதித்தனர். ஆனாலும் ஏனைய போட்டியாளர்கள் உடனே ஐஸ்வர்யாவுக்காக குதிக்க வரவில்லை.
இது தொடர்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் மிக சத்தமாக கத்தி சண்டை போட்டனர். இதனை பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி “இதுவும் ட்ராமாவாக தான் இருக்கும்” கூறி விமர்சித்துள்ளார்.
அவர் கூறியது பிழையாக இருந்தாலும், அவர் சொன்ன விஷயம் சரி என நினைக்க வைத்தது பார்வையாளர்களுக்கு. ஏனென்றால் அவர் சொல்லி சில மணி நேரத்தில் இருவரும் மீண்டும் கதைத்துக்கொண்டிருந்தனர்.
பிக்பாஸ் நல்லா ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறிங்க? பரபரப்பை கூட்டுறதுக்கு இப்பிடி ஒரு நாடகமா?