வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அமைப்பதில் நீடித்த இழு பறி நேற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இருவேறு திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடு களை அமைக்கும் பணிகள் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன. Indian Housing Scheme Problem Solved
25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலை மையிலான குழுவால் நேரடியாகக் கையாளப்படவுள்ளது. அதேவேளை 40 ஆயிரம் வீடுகளை இந்தியாவா? சீனாவா அமைப்பது என்ற சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வீடுகளை அமைக்கும் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று மாலை 5 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோகணேசன், சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
வடக்கு, கிழக்கில் வீடமைப்பு பணிகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடித்து வருகின்றது. 25 ஆயிரம் கல் வீடுகளை அமைப்ப தற்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்த பின்னரும், எந்த அமைச்சு ஊடாக அந்தத் திட்டத்தை முன்னெடுப்பது என்பதில் இழுபறியிருந்தது. இது தொடர்பில் நேற்றைய உயர் மட்டக் கூட்டத்தில் நீண்ட நேரம் விலாவாரியாக ஆராயப்பட்டது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலை மையில் ஒரு குழு அமைப்பது என்றும் அந்தக் குழு இந்த வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது என்றும் முடிவு எட்டப்பட்டது. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணியின் செயலர் வே.சிவஞானசோதி, இந்தக் குழுவின் நிறைவேற்றுப் பொறுப்பாளராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மனோகணேசன், சுவாமிநாதன், இரு அமைச்சுக்களினதும் செயலர்கள், தலைமை அமைச்சரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம், வே.சிவஞானசோதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிதி ஒருவரும் உள்ளடங்குவார்கள்.
நிதிக் கையாளுகை விடயம் அமைச்சர் மனோகணேசனின் செயலரே மேற்கொள்வார். அது பெயரளவிலானதாகவே இருக்கும். தலைமை அமைச்சர் தலைமையிலான குழுவின் முடிவுக்கு அமைவாகவே வீடுகள் அமைக்கும் பணி வடக்கு, ,கிழக்கில் முன்னெக்கப்படும்.
இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் வீட்டுத் திட்டம் ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி
- கடலில் மிதந்து வந்த விநாயகர் சிலை
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்