முன்பணமாக பெற்ற பணத்தை வட்டியுடன் செலுத்தும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.High-court orders actor Simbu
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் செக்கசிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக சுந்தர். சி இயக்கும் படத்திலும் ஹூரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதோடு, வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி பேசன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து அரசன் என்ற புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டு, சிம்புவிற்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்காத காரணத்தினல், பேசன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம், சிம்புவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக, சிம்புவின் அப்பாவும், நடிகரும் லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் கூறும்போது, ‘தற்போது சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை தாங்க முடியாத ஒரு சிலர் அவருக்கெதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் அப்பீல் செய்து சட்டப்படி நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
Tag: High-court orders actor Simbu
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்