இரண்டு அரசியல் கள்­வர்­க­ளையும் விரட்­டி­ய­டிக்க வேண்டும்! அனு­ர­கு­மார திசா­நா­யக்க சூளுரை!

0
716

அரச வளங்களை தனியார் மயப்படுத்தும் ஒரே நோக்கத்தில் அரசாங்கமும், மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது எதிரணியும் அரசியல் செய்துவரு­கின்­றன. இரண்டு கள்­வர்­க­ளையும் விரட்­டி­ய­டிக்க வேண்டும் என்­பதே எமது நோக்கம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். JVP Leader Anura Kumara Dissanayake Statement Tamil News

கோத்தா, பஷில் இரு­வரும் அமெ­ரிக்க பிர­ஜைகள். அமெ­ரிக்கா என்ன சொல்­கின்­றதோ அதையே செய்­வார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்ட அவர்,

கடந்த மூன்று ஆண்­டு­களில் நாட்டின் பொரு­ளா­தாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்­டுள்­ளது. மக்­களின் வாழ்­வா­தாரம் பாரிய நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி கண்­டுள்­ளது. பிர­தமர் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

நாட்டின் வளங்­களை விற்று அதன் மூல­மாக வரு­மா­னத்தை தேடிக்­கொள்­வதை மட்­டுமே இந்த அர­சாங்கம் செய்து வரு­கின்­றது. இன்று இலங்கை தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னத்தின் பங்­கு­க­ளையும் விற்கும் திட்­டத்­தினை வகுத்து வரு­கின்­றனர் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை