புத்தனின் ரவுடித்தனத்தை உடனடியாக தடைசெய்ய கோரிக்கை – விஜேதாச

0
747
budunge rasthiyadu book release arrest writers vijeyadasa

(budunge rasthiyadu book release arrest writers vijeyadasa)

“புதுன்கே ரஸ்தியாது” (புத்தனின் ரவுடித்தனம்) என்ற புத்த பெருமானையும் பௌத்த மதத்தையும் நிந்திக்கும் வகையில் எழுதப்பட்டதாக கூறப்படும் நூல் தொடர்பில் உடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் நேற்று (20) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நூல் புத்தபெருமான் தொடர்பில் மிகவும் இழிவான முறையில் கருத்துக்களை முன்வைத்துள்ளது. இதனால், இலங்கையிலுள்ள பௌத்தர்கள் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியிலுள்ள பௌத்தர்களும் பெரும் மன வேதனை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நூலின் ஆசிரியர், நூலை வெளியிட்டவர், விநியோகிப்பவர் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வழக்குத் தொடர வேண்டும் எனவும் அமைச்சர் அந்தக் கடிதத்தில் பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளார்.

(budunge rasthiyadu book release arrest writers vijeyadasa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites